காந்தர்வமணமும் களவொழுக்கமும்
காந்தர்வமணமும் களவொழுக்கமும் (குறிஞ்சிப்பாட்டு) முனைவர் இர . பிரபாகரன் இந்துமதத்தின் புராணங்களிலும் இதிகாசங்களிலும் எட்டு வகையான திருமணங்கள் குறிப்பிடப்படுகின்றன. அவை வடமொழியில் பிரமம் , பிரசாபத்தியம் , ஆரிஷம் , தெய்வம் , காந்தர்வம் , அசுரம் , ராட்சசம் , பைசாசம் என்று அழைக்கப்படுகின்றன. பிரமம்: ஒரு பெண்ணுக்கு அணிகலன்கள் அணிவித்து , வேதம் கற்று பிரமசாரியாய் இருப்பவன் ஒருவனுக்கு அவளைத் தானமாகக் கொடுப்பது . பிரசாபத்தியம்: ஆண் பெண் ஆகிய இருவரது பெற்றோரும் உடன்பட்டு , அந்த ஆணுக்கு அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து வைப்பது. ஆரிஷம்: ஒன்றோ இரண்டோ பசுவும் , காளையும் தானமாகப் பெற்றுக்கொண்டு பெண்ணைக் கொடுப்பது. தெய்வம்: வேள்வி செய்வோர் பலருள் ஒருவருக்குத் தன் மகளை வேள்வித் தீ முன் மணம் முடித்துத் தருவது. காந்த...