Posts

Showing posts from September, 2018

தமிழால் இணைவோம்; செயலால் வெல்வோம்!

தமிழால் இணைவோம்; செயலால் வெல்வோம்! முனைவர் இர. பிரபாகரன் உலகில் சுமார் எட்டுக் கோடித் தமிழர்கள் இருப்பதாகவும் அதில் 6.5 கோடித் தமிழர்கள் இந்தியாவிலும் மற்ற 1.5 கோடித் தமிழர்கள் பல்வேறு நாடுகளிலும் இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. தமிழர்கள் பல நாடுகளிலிருந்தாலும் தமிழர்களுக்கென்று ஒரு நாடு இல்லாத காரணத்தால் நாம் எல்லா நாடுகளிலேயும் சிறுபான்மையினராகவே பலகாலமாக வாழ்ந்து வருகிறோம். ஒரு இனம் சிறுபான்மையானதாக இருந்தால், பெரும்பான்மையினரின் ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் அடங்கி வாழவேண்டிய சூழ்நிலையில்தான் அவ்வினம் இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. உலகில், இனத்தின் அடிப்படையில் நெடுங்காலமாகப் போர்கள் நடைபெற்று வருகின்றன என்பதற்கு   வரலாற்றில் பல சான்றுகள் உள்ளன. கடந்த நூற்றாண்டில், இனத்தின் பெயரால் எவ்வளவோ அட்டூழியங்களும் படுகொலைகளும் நடைபெற்றன. ஹிட்லரின் தலைமையில் செர்மானியர்கள் பல்லாயிரக்கணக்கான யூதர்களைக் கொன்று குவித்தார்கள். ஐரோப்பாவில் பால்கன் வட்டாரத்தில் செர்பியர்களுக்கும் மற்ற இனத்தவருக்கும் இடையே நடைபெற்ற போரில் ஆயிரக் கணக்கானவர்கள் கொலை செய்யப்பட்டார்கள்.

ஏன் இந்தப் பண்ணித் தமிழ்?

ஏன் இந்தப் பண்ணித் தமிழ் ? முனைவர் இர . பிரபாகரன் பண்ணித் தமிழ் தமிழ்நாட்டில் பலரும் தங்கள் பொருளாதார வசதிக்கும் அதிகமாகச் செலவு செய்து , தங்கள் குழந்தைகளை ஆங்கிலத்தில் கல்வி பயிற்றுவிக்கும் பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள் . ஐந்து வயதுக் குழந்தை வீட்டுக்கு வந்து , உயிரோடு இருக்கும் அம்மாவை “ மம்மி ” என்று அழைக்கிறது . அந்தத் தாய் அளவில்லாத   மகிழ்ச்சி அடைகிறாள் . அறியாத வயதில் புரியாததைக் குழந்தை கூறுகிறது . அது போகட்டும் . படித்தவர்கள் என்ன செய்கிறார்கள் ? ” அந்தக் கதவைத் திற ” என்பதற்குப் பதிலாக ” அந்த டோரை ஓபன் பண்ணு ” என்றும் , ” அந்தப் பெட்டியை மூடு ” என்பதற்குப் பதிலாக “ அந்த பாக்ஸை குளோஸ் பண்ணு ” என்றும் , “ என்னைத் தொலை பேசியில் கூப்பிடு ” என்று கூறுவதற்குப் பதிலாக   “ என்னை செல் போனில் கால் பண்ணு ” என்றும் பலரும் பேசுகிறார்கள் . இவர்கள் பேசுவதில் “ பண்ணு ” என்ற வினைச்சொல் மட்டுமே தமிழ் . இந்தக் கொடுந்தமிழுக்குப் பெயர்தான் பண்ணித் தமிழ் !   இது ” தமிங்கிலம் ” அல்லது ” தங்கிலீஷ் ” என்றும் அழைக்கபடுகிறது . தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை என்று கருதப்படும் மறைமலை அடிகள

வள்ளுவத்தில் புதுமையும் புரட்சியும்

வள்ளுவத்தில் புதுமையும் புரட்சியும் முனைவர் இர . பிரபாகரன் புதுமையும் புரட்சியும்   இதுவரை அனுபவிக்காதது , காணாதது , கேள்விப்படாதது , முற்றிலும் புதியது புதுமை என்று கருதப்படுகிறது .   சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பழக்க வழக்கங்கள் அல்லது கருத்துகள் ஆகியவற்றிற்கு மாறான கருத்துகள் புரட்சிகரமானவையாகக் கருதப்படுகின்றன .   இந்த வரையறை அடிப்படையில் பார்த்தால் , திருக்குறளில் புதுமையான கருத்துகளும்   புரட்சிகரமான கருத்துகளும் உள்ளன என்பதை உணரமுடியும் .                                                                                               ஆப்பிள் மரத்திலிருந்து ஆப்பிள் விழுவதைக் கண்ட ஐசக் நியூடன் (Isaac Newton) புவியின் ஈர்ப்புச் சக்தியைக் கண்டுபிடித்தார் .   அதற்கு முன்பு , “ ஆப்பிள் ஏன் கீழே விழுகிறது ?” என்று யாரும் சிந்திக்கவில்லை .   ஆகவே , ஐசக் நியூடனின் கருத்து   புதுமையான கருத்தாகக் கருதப்பட்டது . சில சமயங்களில் , புதுமையான கருத்து   புரட்சிகரமானதாகவும்   இருக்கலாம் . பதினாறாம் நூற்றாண்டுவரை ,   இந்தப் பிரபஞ்சம் , பூமியை மையமாகக்கொண்டு இயங்குகிறது என்ற கருத்